ஐந்து அறிவு
இந்த உடல் பிறக்கும் போது ஒரு 'நானும்' அதில் கிடையாது!
அப்புறம் ஒவ்வொரு 'நானாக' அதில் உருவாகி சேர்ந்து சேர்ந்து ஆயிரக் கணக்கான 'நான்'களாக அந்த உடலில் குடியிருந்து வருகின்றன.
முதல் நான் பார்க்கும் நான். அப்புறம் கேட்கும் நான் என ஐந்து பிரதான நான்கள் தோன்றி மூளையின் வீடுகளில் குடியிருக்கின்றன.(ஐந்து அறிவு).
அவைகளின் கிளை நான்கள் ஆயிரக் கணக்கில் அந்த உடல் வளர வளர உருவாகிய படி இருக்கும்.
பார்க்கும் வேலையை செய்கிற நானால் கேட்கும் வேலையை செய்ய முடியாது. டிவி பார்க்கும் போது பார்க்கவும் கேட்கவும் தானே செய்கிறோம் என நினைக்கலாம். ஆனால் ஒன்று மாற்றி ஒன்றையே கவனித்து வருவோம். 'ஐயோ சரியா காதில் விழலையே' 'இப்போ இவன் என்ன சொன்னான்' என பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதே இதுக்கு அத்தாட்சி.
தமிழுக்கு பேச ஒரு நான், எழுதத் தெரிந்த ஒரு நான், பாடத் தெரிந்த ஒரு நான் என ஒரு விஷயத்திற்கே பல நான்கள் உண்டு.
இங்கிலீஷ் படிக்காதவனுக்கு அந்த இங்கிலீஸ் நான் உருவாகி இருக்காது.
எனவே ஒரு மனிதன் என்பவன் பல ஆயிரம் நான்களின் மொத்தம் ஆவான். அவன் ஒரு multiple personality! சூழ்நிலைகளுக்கு ஏற்ப அந்த அந்த நான்கள் active mode க்கு வரும்.
இவ்வளவு நான்கள் இருந்தும் பிறகு ஒருவராலும் அதை ஏன் இவ்வளவாகவும் உணர முடியவில்லை? ஒரே நானைத்தானே உணர்கிறோம்!
நாம் எப்போதும் உணர்ந்து வருவது அந்த ஒரே 'நானாகிய' ஆன்மாவைத்தான்! அதனால் நமக்கு உள்ளே ஒரே நானாகவே நமக்கு வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது.
ஆனால் பிரச்சனை என்னவெனில்...
இந்த நானை தனியாக rawவாக உணர முடியாது.
மேலே சொன்ன 'அறிவு நான்கள்' active modeக்கு வரும் போது இந்த ஒரிஜினல் 'ஆன்ம நான்' தன்னை இந்த 'அறிவு நானாக' அடையாளப்படுத்தி அறிகிறது.
இப்படியே இந்த ஆன்ம நான் தன்னை பார்பவனாக, கேட்பவனாக, அடிப்பவனாக, அன்பனாக, கோபக்காரனாக, இரங்குபவனாக, ஆங்கிலம் தெரிந்தவனாக, கவிஞனாக, ஞானியாக என மாறி மாறி அடையாளப் படுத்திய வண்ணம் இருக்கும்.
உடல் இறந்த பின் இந்த அறிவு நான்கள் நிரந்தரமாக மறைகின்றன. ஆன்ம நான் இந்த உடலை நம்பியது இல்லையாகையால் அது வழக்கம் போல நிர்குணமாக அறிவற்று எஞ்சி எப்போதும் போல இருக்கிறது. ஆனால் அதை அறிய முடிவதில்லை. அதை அறிவதற்காகத்தான்,
இந்த அறிவு multiple personalityகளை சரியாக அடையாளம் படுத்தி இந்த நான்களை எல்லாம் இதுவல்ல ஆன்ம நான், அதுவல்ல ஆன்ம நான் என ஒதுக்கி ஒதுக்கி இறுதியில் இந்த ஒதுக்கவே முடியாத ஆன்மநானை வந்து அடைகிறோம்.
வேதம் இந்த முறையைத் தான் "நேதி நேதி" டெக்னிக் எனக் கூறும்.
இந்த ஆன்மநானை வந்து அடைவதே முக்தி ஆகும்.
இதை அடைய இந்த அறிவுநான்களே ஆரம்பத்தில் உதவுகிறது.
எப்படி உதவுகிறது எனில்...
இந்த அறிவுநான்களை அதே அறிவு நான்களை வைத்தே கழித்துக் கொண்டே வருவோம். முடிவில் ஒரே ஒரு அறிவு நான் மாத்திரம் மிஞ்சும். இந்த ஒன்றே ஒன்றை தூரப் போடுவது மிக எளிதானது என அதை தூர வீசும் போது நமக்கே தெரிய வரும்.
இதை பிணம் சுட பயன்படும் குச்சிக்கு உதாரணம் ஆக்குவார்கள். ஒரு குச்சியை பயன்படுத்தி பிணத்தில் எரியும் தீயை கிளறி விட்டு பிணத்தை சுட்டு முடிக்கும் போது இந்த குச்சியும் கரைந்து கரைந்து சிறியதாகி விடும். பின்பு அதையும் அதே தீயில் போட்டு எரித்து விடுவோம்.
ஓம் எனும் குச்சியால் இந்த அறிவுநான்களை கிளறிக் கிளறி எரித்து பின்பு இந்த தீய்ந்து போன ஓம் எனும் கடைசி அறிவுநானையும் அதிலேயே கடைசியாக போட்டு எரித்து
நாம் மட்டும் அந்த ஒரிஜினல் 'ஆன்மநானாக' எஞ்சி நிற்போம்!